search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரஷியா உலகக் கோப்பை"

    உலகக் கோப்பையில் விளையாடுவதற்காகவே ரஷியா வந்துள்ளேன் என்று எகிப்து அணியின் முன்னணி வீரர் முகமது சாலா கூறியுள்ளார். #FIFA2018
    எகிப்து கால்பந்து அணியின் முன்னணி வீரர் முகமது சாலா. இவர் லிவர்பூல் அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த 27-ந்தேதி நடைபெற்ற ரியல் மாட்ரிட் அணிக்கெதிரான யூரோ சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் சாலாவிற்கு காயம் ஏற்பட்டது.

    இந்த காயத்திற்காக மூன்று வாரங்கள் முகமது சாலா ஓய்வு எடுக்க வேண்டியிருக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவித்தனர். சனிக்கிழமை எகிப்து அணி ரஷியா சென்றடைந்தது. ரஷியா அணியுடன் முகமது சாலாவும் சென்றிருந்தார்.



    நான் ரஷியா வந்ததே உலகக் கோப்பையில் விளையாடுவதற்கே என்று முகமது சாலா கூறியுள்ளார். இதுகுறித்து சாலா கூறுகையில் ‘‘காயம் ஏற்பட்டது துரதிருஷ்டவசமானது. நான் ரஷியா வந்ததே உலகக் கோப்பையில் விளையாடுவதற்காகத்தான்.

    நாங்கள் உலகக் கோப்பையில் விளையாட தகுதி பெற்ற பின்னர், நான் அணியில் இடம்பெறாவிடில், உண்மையிலேயே கடினமாக இருக்கும். கடவுள் உலகக் கோப்பையில் நான் ஒரு பகுதியாக இருக்கும் வாய்ப்பை அளித்துள்ளார். கனவு நனவாகியுள்ளது’’ என்றார்.
    முகமது சாலாவின் உடற்தகுதி குறித்து உறுதியான நிலை தெரியாத போதிலும், நம்பிக்கையுடன் ரஷியா வந்தடைந்தது எகிப்பு அணி. #WorldCup2018
    பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் எகிப்பு அணி கடைசியாக 1990-ம் ஆண்டு இடம்பிடித்திருந்தது. அதன்பின் தற்போதுதான் 28 ஆண்டுகள் கழித்து 3-வது முறையாக தகுதிப் பெற்றுள்ளது. இதற்கு முகமது சாலாவின் ஆட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.

    கடந்த மாதம் 27-ந்தேதி நடைபெற்ற யூரோப்பா சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ரியல் மாட்ரிட் - லிவர்பூல் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியின்போது முகமது சாலா தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இந்த காயம் குணமடைய சுமார் மூன்று வாரங்கள் ஆகும் எனக் கூறப்படுகிறது.

    அதன்படி பார்த்தால் வருகிற 15-ந்தேதி உருகுவே அணிக்கெதிரான ஆட்டத்தில் விளையாட தகுதி பெறுவாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    இந்நிலையில் சாலாவுடன் எகிப்பு அணி நேற்றுமுன்தினம் (சனிக்கிழமை) ரஷிய வந்தடைந்துள்ளது. சாலா அணியில் இடம்பிடித்திருந்தாலும் அவர் உருகுவே அணிக்கெதிரான முதல் ஆட்டத்தில் பங்கேற்பது குறித்து உறுதியான தகவல் ஏதும் வெளிவரவில்லை.



    இதுகுறித்து எகிப்பு அணி டாக்டர் கூறுகையில் ‘‘நாங்கள் இந்த வாரம் தொடக்கத்தில் முகமது சாலாவின் காயம் குறித்து மதிப்பீடு செய்வோம். இரண்டு நாட்களுக்குப் பிறகும் எங்களால் உறுதியாக சொல்ல முடியாது. அவர் முழுவதும் குணமடையும் முன்பு, விளையாட அனுமதிக்கமாட்டோம்’’ என்றார்.

    எகிப்து அணியின் மானேஜர் கூறுகையில் ‘‘எங்கள் அணி போட்டியில் களம் இறங்க தயாராக இருக்கிறது. மனஉறுதியைில் அதிகமாக உள்ளது’’ என்றார்.

    ‘ஏ’ பிரவில் இடம்பிடித்துள்ள எகிப்பு 15-ந்தேதி உருகுவே அணியை எதிர்கொள்கிறது. 19-ந்தேதி ரஷியாவையும், 25-ந்தேதி சவுதி அரேபியாவையும் எதிர்கொள்கிறது.
    உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கான பயிற்சி ஆட்டத்தில் செக் குடியரசை 4-0 என வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி பெற்றுள்ளது. #worldCup
    உலகக் கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் வருகிற 14-ந்தேதி தொடங்குகிறது. அடுத்த மாதம் 15-ந்தேதி வரை நடக்கிறது. இந்த தொடருக்காக 32 அணிகள் தயாராகி வருகின்றன. தற்போது அனைத்து அணிகளும் பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகிறது.

    ஆஸ்திரேலியா இன்று நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் செக் குடியரசை எதிர்கொண்டது. இதில் 4-0 என ஆஸ்திரேலியா வீழ்த்தியது. ஆட்டத்தின் 32-வது மேத்யூ லெக்கி முதல் கோலை பதிவு செய்தார். ஆட்டத்தின் 54-வது நிமிடத்தில் அன்ட்ரிவ் நப்அவுட் ஒரு கோல் அடித்தார். 72-வது நிமிடத்தில் மேத்யூ லெக்கி மேலும் ஒரு கோல் அடித்தார். இதனால் 3-0 என ஆஸ்திரேலியா முன்னிலைப் பெற்றது. 80-வது நிமிடத்தில் ஓன் கோலால் மேலும் ஒரு கோல் கிடைக்க ஆஸ்திரேலியா 4-0 என வெற்றி பெற்றது.



    இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின் வெளிநாட்டு மண்ணில் வெற்றி பெற்றுள்ளது. ஆஸ்திரேலயா கடைசியாக 2016 செப்டம்பர் மாதம் அபுதாயில் நடைபெற்ற ஆட்டத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை 1-0 என வீழ்த்தியிருந்தது. அதன்பின் தற்போதுதான் வெற்றி பெற்றுள்ளது.

    உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா, பிரான்ஸ், டென்மார்க், பெரு ஆகிய அணிகள் ‘சி’ பிரிவில் இடம்பிடித்துள்ளது.
    ரியல் மாட்ரிட் அணிக்கெதிரான ஆட்டத்தில் காயம் அடைந்த சாலா உலகக் கோப்பை தொடரில் பங்கேற்பது சந்தேகம் எனக் கூறப்பட்டுள்ளது.
    உக்ரைனில் கடந்த சனிக்கிழமை நள்ளிரவு நடைபெற்ற யூரோப்பா சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் ரியல் மாட்ரிட் - லிவர்பூல் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் ரியல் மாட்ரிட் 3-1 என வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

    இந்த போட்டியின் முதல் பாதி நேரத்தில் லிவர்பூல் அணியின் முன்னணி வீரரான முகமது சாலாவின் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனால் கண்ணீரோடு தொடர்ந்து விளையாட முடியாமல் வெளியேறினார். இந்த காயத்தால் அடுத்த மாதம் 14-ந்தேதி தொடங்கும் உலகக் கோப்பை தொடரில் எகிப்து அணிக்காக விளையாடுவாரா? என்ற சந்தேகம் இருந்தது வந்தது.

    காயம் அடைந்த முகமது சாலா ‘‘யூரோப்பா சாம்பியன்ஸ் லீக் நடைபெற்ற இறுதிப் போட்டி கடினமான இரவாக அமைந்தது. என்றாலும், நான் ஒரு போராளி. நான் ரஷியா சென்று உங்களுக்கு பெருமை சேர்ப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது. உங்களுடைய அன்பு மற்றும் ஆதரவு எனக்கு வலிமையை கொடுக்கும்’’ என்று கூறியிருந்தார்.



    இந்நிலையில் லிவர்பூல் கால்பந்து கிளப் அணியின் பிசியோ, சாலாவின் காயம் குணமடைய மூன்று அல்லது நான்கு வாரங்கள் ஆகும் எனக் கூறியுள்ளார். இதனால் உலகக்கோப்பை தொடரில் சாலா பங்கேற்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    எகிப்து முதன்முறையாக 1934-ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் விளையாட தகுதிப் பெற்றது. அதன்பின் 56 வருடங்களுக்குப் பின் 1990-ம் ஆண்டு தகுதிப் பெற்றது. தற்போது 28 ஆண்டுகள் கழித்து தகுதிப் பெற்றுள்ளது. எகிப்து அணி உலகக்கோப்பைக்கு தகுதி பெற முகமது சாலாவின் ஆட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
    கொகைன் போதைப் பொருள் உட்கொண்ட விவகாரத்தில் பெரு கால்பந்து அணி கேப்டனின் தண்டனைக் காலம் அதிகரிக்கப்பட்டதால் உலகக் கோப்பையை மிஸ்ஸிங் செய்கிறார்.
    பெரு கால்பந்து அணியின் கேப்டன் குயெர்ரேரோ. இவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அர்ஜென்டினாவிற்கு எதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்றில் விளையாடினார். அப்போது அவருக்கு ஊக்கமருந்து பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் கொகைன் ஊக்கமருந்து உட்கொண்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதனால் அவருக்கு பிபா ஓராண்டு தடைவிதித்தது. இதை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்தார். இதில் அவரது தண்டனை 6 மாதமாக குறைக்கப்பட்டது. இதனால் அவரது தண்டனை கடந்த 10 நாட்களுக்கு முன் முடிவடைந்தது. இதனால் ரஷியாவில் அடுத்த மாதம் நடைபெறும் உலகக்கோப்பையில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.



    ஆனால் உலக ஊக்கமருந்து தடுப்பு ஏஜென்சி டீயில் கொகைன் போதைப்பொருள் கலந்து அருந்திய குயெர்ரேரோவிற்கு அதிகப்படியான தண்டனை கொடுக்க வேண்டும் என்று விளையாட்டுக்கான நடுவர் மன்றத்தில் முறையிட்டது. இதை ஏற்றுக் கொண்ட நடுவர் மன்றம் 6 மாத தண்டணையை 14 மாதங்களாக உயர்த்தியது. இதனால் குயெர்ரேரோ உலகக்கோப்பையில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
    ×